அக்.,10 தேசிய அஞ்சல் தினம்
* உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடு, இந்தியா. இரண்டாவது, சீனா. இந்தியாவில், 155531 அஞ்சலகங்கள் இயங்குகின்றன
* முதன்முதலாக, 1764ல், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டாவில், அப்போதைய கவர்னர், வாரன் ஹேஸ்டிங் என்பவரால், அஞ்சலகங்கள் துவங்கப்பட்டன
* ஜூலை 1, 1852ல் வெளியிடப்பட்ட தபால் தலை, வட்ட வடிவில் அமைந்திருந்தது.
* விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த தபால் தலை, 1854ல் வெளியிடப்பட்டது
* இந்தியாவில், 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்குகின்றன. நாள் ஒன்றுக்கு, இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன
* இந்திய தபால் துறை, 150 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சேவை புரிந்து வருகிறது. 2001ம் ஆண்டு கணக்கின்படி, 5.95 லட்சம் ஊழியர்கள்,
இதில் பணிபுரிகின்றனர்
* 21 சதுர கி.மீ.,யில், 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகம் என்ற கணக்கின்படி செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும், 10 ஆயிரத்து, 263 அஞ்சலகங்கள் இயங்குகின்றன
* அக்காலத்தில், 100 மைல், அதாவது, 161 கி.மீ., துாரத்திற்கு கடிதம் எடுத்து செல்ல செலவு, இரண்டணா தான். (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு)
* ஆறு இலக்கம் கொண்ட, அஞ்சல் குறியீட்டு எண், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இலக்கம் - மண்டலம், இரண்டாவது - துணை மண்டலம், மூன்றாவது - அஞ்சல் பிரிப்பக மாவட்டம், கடைசி மூன்று - அஞ்சல் வட்டத்தின், அஞ்சல் நிலையத்தை குறிக்கும்
* அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்பு திட்டங்கள்: செல்வ மகள், பொது சேம நல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு கணக்கு, காப்பீடு திட்ட சேவை, மாத வருவாய் திட்டம், வைப்பு தொகை திட்டம், கடவுச் சீட்டு விண்ணப்பம் மற்றும் தங்க காசு விற்பனை.
Source : https://www.dinamalar.com/