திரு. ரவி சொக்கலிங்கம் அய்யா அவர்களின் 2019-2020 கல்வியாண்டின் இரண்டாவது திட்டம் ...
தேசிய திறனறி மற்றும் கல்வி ( N M M S ) உதவித்தொகைக்கான போட்டித்தேர்வில், 2018-2019 ம் கல்வியாண்டில் வெற்றிபெற்று சாதனை புரிந்ததைப்பாராட்டி சிறப்புப்பரிசும், பாராட்டுச்சான்றிதழும் 150 அரசுப்பள்ளி மாணவ /மாணவியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ..
அரசு பள்ளிகளில் ஏராளமான திறன் வாய்ந்த மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டுதலும் , சிறு ஊக்குவிப்பும் வழங்கினால் ,அவர்கள் பிரகாசிக்க துவங்குவார்கள்.தன் அறிவு திறனால் உழைத்து படிக்கும் போதே ஊக்கத்தொகை பெற்று சாதிக்கும் இந்த பிள்ளைகளை வாழ்த்துவது கடமை.மேலும் இது போன்ற தேர்வுகள் - எதிர்காலத்தில் எல்லா வகை போட்டி தேர்விலும் வெற்றி பெறும் தன்முனைப்பை அவர்களுக்கு தரக்கூடியது.
உழைத்து சாதித்த குழந்தைகளையும்
ஊக்குவித்து போதித்த ஆசிரியர்களையும் வாழ்த்துவோம்.
Distribution of medals and certificates to 150 Govt.school children who were successful in the NMMS examination ....