மே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம்

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், 

மே 3 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு தொடங்கப்படும். இன்ஜினியரிங் படிப்புக்கு வரும் 29ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். 

மே 30 ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள். 

விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 1,52,704 இன்ஜினியரிங் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி