டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர்விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்துஅமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டுமேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளிமாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கைகூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில்தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திவெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள்கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது: -வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது,தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கானசிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ஆம்ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதிதமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணிநிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல்இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கானஅனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும்பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழகமாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில்எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில்குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம்ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல்அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்டஅறிவிக்கையிலும் கடைபிடித்துவெளியிடப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால்
சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும்இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள்தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுபணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள்மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.