முதல் வகுப்பில் 30.9.2012.ல் பிறந்த மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.31.7.2012வரை பிறந்த 5+ குழந்தைகளுக்கு தவிர்ப்பு வேண்டியதில்லை.
1.8.2012 முதல் 31.8.2012 வரை பிறந்த குழந்தைகளை சேர்த்தால் உதவி தொடக்கக்கல்வி அலவலரிடம் தவிர்ப்பு பெற்றுக்கொள்ளலாம். 1.9.2012 முதல் 30.9.2012 வரை பிறந்த குழந்தைகளுக்கு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் தவிர்ப்பு பெறப்பட வேண்டும். தவிர்ப்பு வேண்டி விண்ணப்பிக்கும் போது கீழ்கண்டவற்றை சேர்த்து இணைத்து அனுப்பவும் 1.சேர்க்கை விண்ணப்பம் .2.பிறப்புச்சான்று 3.இத்தனை நாளுக்குத்தவிர்ப்பு வேண்டி தலைமையாசிரியரின் விண்ணப்பம்.