ஸ்மார்ட் ( சிப் எல்லாம் இல்லை QR code மட்டும்தான்) ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை!!


ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில்இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம்கீழ்,
1. 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால்,அனைத்து பொருட்களும்;
2. 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோஅரிசி உட்பட, அனைத்து பொருட்களும்தரப்படும்.
3. ' என்.பி.எச்.எச் ' என மட்டும் இருந்தால்,அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்தரப்படும்.
4. 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால்,சர்க்கரை;
5. 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால்,எந்த பொருட்களும் வழங்கப்படாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு'வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின்மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும்நுகர்வோர் பாதுகாப்பு துறை' என,அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர்,கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்ததேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண்,முகவரி போன்றவை இருக்கும். பின்புறம்,உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண்,ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.' (QR code) என்றகுடும்ப அட்டை விவரத்தை குறியீடாகபதிந்த அமைப்பு இருக்கும். கார்டின் கீழ்பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காகபயன்படுத்தக் கூடாது' என,எழுதப்பட்டிருக்கும்.
ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ளபள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களைவரவழைத்து, புது கார்டுகள் இலவசமாகவழங்கப்படும்.
குறிப்பு- வாட்ஸ் அப் இல் வந்த தகவல் ...