நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது:மத்திய அரசு



புதுடில்லி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு தற்போதைய சூழ்நிலையில் விலக்கு அளிக்க இயலாது என மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் டில்லி சென்று மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்தனர். தொடர்ந்து, மீண்டும் இன்று டில்லி சென்று நட்டாவை சந்தித்தனர். தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க இயலாது. தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டஅமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் நட்டா விஜயபாஸ்கரிடம் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி