ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?


ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக்கொண்டது. 3 மணிநேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர்தேர்வு வாரியமானடி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட்(D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ்,ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம்5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150மதிப்பெண்களுக்கான தாள் இது. தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல்பட்டப்படிப்போடு பி.எட்கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத்தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தைமேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதேகேள்வித்தாளில் கணிதம்அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூகஅறிவியலில் இருந்து 60வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- IIஎன்பதுபட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப்பட்டயம்தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்துபட்டதாரிஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்தஇரண்டுதாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை,பட்டதாரி எனஇரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்புபாடப்புத்தகங்களில்ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்புபாடங்களில் ஓரளவேனும்தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர்பட்டய படிப்புக்கான கல்வியியல்மற்றும் உளவியல் பாடத்திலும்தயாராவது அவசியம். தாள்- IIஎழுதுபவர்கள் 6 - 10 வரையிலானதங்கள் பிரிவு பாடங்களில்ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில்தங்கள் பிரிவு பாடங்களில்ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவேபி.எட் பாடத்திட்டத்தில் உள்ளகல்வியல் மற்றும் உளவியலில் நன்குதயாராவதும் அவசியம்.

150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒருமதிப்பெண்பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்'எனப்படும்'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150மதிப்பெண்களில் 60சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள்தகுதி நிலையைஎட்டுகிறார்கள்.

காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்தடி.இ.டிதேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமேவிண்ணப்பிக்கமுடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லதுஅரசு அறிவிக்கும்அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியைநிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லதுகல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதிமுடிவு எடுக்கப்படும்.

தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை மாதிரித்தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும்ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில்,தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம்இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி