
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை எளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில்வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும்சில வசதிகளை அறிமுகம்செய்துவருகிறது.
உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களதுபண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பணஅட்டைகளை அதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ளவேளையில் சைபர் உலகின் தாக்குதலில் இருந்துவாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும்போது ON / OFF செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Android மொபைல் Play store ல் கிடைக்கும் SBI Quick செயலியின் மூலம்ஏற்கெனவே வங்கி இருப்பு, சிறு அறிக்கை போன்ற சேவைகளைமிஸ்டு கால் மற்றும் குறுந்தகவல் மூலமாக பெற்றுவருகிறோம். கூடுதலாக தற்போது ATM அட்டையை பணம் எடுக்கும்போதும்,பொருட்களை வாங்கும்போதும் மொபைலில் ATM அட்டையை ON செய்து பிறகு அட்டையின் தேவை இல்லாத போது அட்டையை யாரும்பயன்படுத்தாத வகையில் OFF செய்து வைத்துவிடலாம்.

