'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டபள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில்திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு,பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள்மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள்ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள்விண்ணப்பிக்கின்றனர்.

தாமதம் : இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல்போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வுமுடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும்கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல்மற்றும் திருத்தம் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர்,ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வுமையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில் விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்குஅனுப்பப்படும். 

கணினி குறியீடு : பின், அவற்றில் கணினி குறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினி மூலமும், மற்றவை கணினிவழியே பிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த, டிஜிட்டல் திருத்தமுறையால், முறைகேடாக திருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல் போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி