தமிழகத்தில்நவம்பர் 1-ந்தேதி முதல் புதியகுடுமப அட்டை கோரி விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது விநியோகத்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
கடந்த சில வருடங்களாக புதியகுடும்ப அட்டைகள் வழங்க இயலாத நிலையில்உள்தாள் ஒட்டப்பட்டு பொருட்கள் வழங்கப் படுகின்றன.இவ்வாறுகால நீட்டிப்பு செய்யப் பட்ட குடும்பஅட்டை கள் மூலம் டிசம்பர்மாதம் வரை மட்டுமே பொருட்கள்வாங்க முடியும்.
இனி கையடக்கமான புதிய ஸ்மார்ட் கார்டுகள்வழங்க அரசு திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரிமாதம் முதல் ஸ்மார்ட் கார்டுமூலம் பொருட்கள் வாங்க அனைத்து ரேஷன்கடை களிலும் நவீன எலக்ட்ரானிக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்வருகிற 1-ந்தேதி முதல் புதியகுடும்ப அட்டை களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன் லைன் மூலமாகவும்விண்ணப்பிக்கலாம். அதற்குரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பொது விநியோகத்துறை அதிகாரிகள் வீடுகளில் கள ஆய்வு செய்து, புதிய குடும்ப அட்டை 2 மாதத்தில்வழங்கப்படும். குடும்ப அட்டை வழங்கும்போது ஒரிஜினல் சான்று கள் சேகரிக்கவும்திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பானபணிகளும் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன
இவ்வாறுஅந்த அதிகாரி தெரிவித்தார்.