சாதனை படைத்த மாணவிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி பாராட்டு


தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி மாநில அளவில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நெய்வேலியில் நடந்தது. இதில் சைக்கிள் போட்டியில் மாணவிகள் பிரிவில் திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இவர் தொடர்ந்து 3-வது முறையாக தங்கம் பதக்கம் வென்றவர் ஆவார். இதேபோல சக மாணவியான லாவண்யா விருத்தாசலத்தில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவிகள் ஐஸ்வர்யா, லாவண்யா ஆகிய 2 பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி பாராட்டி வாழ்த்தினார். அப்போது ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீனலோசினி, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி