நடப்பு நிதி ஆண்டில் 5,000 கோடி ரூபாய் பி.எப். தொகையினை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதில் 2,322 கோடி ரூபாய் கடந்த அக்டோபர் மாதம் வரை பங்குச்சந்தை சார்ந்த இ.டி.எப்.களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகை சென்செக்ஸ் மற்றும் நிப்டி இ.டி.எப்.களில் முதலீடுசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த முதலீடுகள் குறித்த ஆய்வு மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் தலைமையில் வரும் 24-ம் தேதி நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கூடுதலாக சேரும் தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய பி.எப் அறங்காவலர் குழு முடிவு செய்தது. இதன்படி நடப்பு நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5,000 கோடிரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டப்பட்டிருந்தது.ஆனால் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்ப்பு தெரிவித்தன.
முதன்முதலில், ஆகஸ்ட் 6-ம் தேதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. கடந்த இரு நிதி ஆண்டுகளாக பி.எப். தொகை மீதான வட்டி 8.75 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டிவிகிதம் நவம்பர் 24-ம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.