பெங்களூரு: தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்ப்டடுள்ள ஜிசாட் 15 செயற்கை கோள் வரும் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் விதமாக ஏற்கனவே 2014-ல் ஜிசாட்14 வகை செயற்கை கோள்களும், 2015-ல் ஜிசாட் 6 என்ற செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 15 செயற்கைகோளில் சிபாண்ட் மற்றும் கியூ பாண்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொலை தொடர்பு வசதியை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் மொத்த எடை 3 ஆயிரத்து 164.5கிலோ ஆகும். இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என நி்ர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏவப்பட உள்ளது.இவ்வாறு இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியி்ல் கூறப்பட்டுள்ளது