'வந்தாள் மகாலட்சுமியே! இனி என்றும் அவள் ஆட்சியே...' எனபெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தையாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி'எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.
பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறானஎண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டுபயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசைநோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்தபெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும்அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.
இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம்காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது.வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்தெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லிகொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில்கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதைமாறலாம். ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம்கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்துஇருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ளமுடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம்முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்தகாலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை.நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின்முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலுவைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம்,பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை,கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.
கல்வியும், ஆளுமையும் அவசியம் :
பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம்எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்கவைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையைபெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும்,முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கைஅடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான்வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன்தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடையகற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவேஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலைசிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒருசிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில்கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும்.கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:
பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவிதசூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பதுநல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம்பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்தஇடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும்ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்கவேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ...தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பானநபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்தநேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? எனஅறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும்வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.
அடிப்படை வசதிகள் தேவை:
கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குஅளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசுதரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதைஅரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும்அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்விகண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்கவேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்தஉதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்தநாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒருகுடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள்ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம்ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல...அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழிநடத்துவோம்.
-எம்.டி.விஜயலட்சுமி,