3 ஆண்டு பிஎல் படிப்புக்கு விரைவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவுள்ளது சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய 7 அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்பு வழங்கப்படுகிறது.
மொத்தம் 1,262 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை (ரேங்க் லிஸ்ட்) ஓரிரு நாளில் வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை தொடர்ந்து, கட் ஆப் மதிப்பெண்ணும் அதன்பின்னர் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வும் நடத்தப்படும் என்று சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.