இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை அரசுமேற்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர்தேர்வு வாரிய எழுத்துத் தேர்வினை மாநில அளவில் நடத்தஆரம்பித்து, ஆசிரியர்கள்பாட வாரியாக தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
பின்னர் வந்த அரசு அனைத்து தொகுப்பூதிய ஆசிரியர்களையும், காலமுறை ஊதியத்தை ஒழித்து பணி நிரந்தரம் செய்தது.
அதன் பின்னர் பணி மூப்பின் மூலமாக வேலை வாய்ப்பகத்தின்வாயிலாக ஆசிரியர்கள் சிறிது காலம் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பிறகு மத்திய அரசின் உத்தரவு மற்றும் கட்டாயக் கல்விச்சட்டப்படி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கட்டாயம் எனஅறிவித்தது.அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வின்வாயிலாகவே நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தேர்வு முறை மிகக் கடுமையானது.வினாத்தாள் கடினமாக இருக்கும்என்பதை தகுதித் தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்விழுக்காட்டினை வைத்தே சொல்லிவிடலாம்.
அரசுப் பள்ளிகளில் இப்போதிருக்கிற இளம் ஆசிரியர் படை கணினி, ப்ரொஜக்டர், இணையமெல்லாம் பயன்படுத்தத் தெரிந்த படை.எல்லா தகவல்களையும் தேடி வந்து மாணவர்கள் முன்கொட்டுகிறார்கள்.
மாணவர்களின் சூழலுக்குத் தக்கவாறு தனியார் பள்ளியில் முன்பேபணியாற்றியிருந்தாலும், அரசுப் பள்ளிக்கு வந்தவுடன் தங்களை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருவதே இதற்குசான்று.
#அரசுப்பள்ளி