வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு


அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன் படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதிபொருந்தாத நிலையில் 3ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்தஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கிஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அனைத்து வள மையஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு 24.06.2014அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவும் இன்று காலை தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர்சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு காலை11.30 மணியளவில் வந்தது.


விசாரணையில் சங்கங்கள் வழக்கு தொடுக்க முடியாது என கூறிதள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் நாடஉள்ளதாக வழக்கு தொடுத்த தமிழ்நாடு அனைத்து வளமையஆசிரியர் பயிற்றுநர்கள் முன்னேற்ற சங்க தலைவர் திரு.கே.சம்பத்தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி