பரபரப்பான ஐகோர்ட் தீர்ப்பால் கல்வி துறையில் புதுமை பூக்கட்டும்!

மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவிஇழப்பு, தமிழக கல்வித் துறையில் பரபரப்பு ஏற்படுத்தும் தகவலாகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்ட திட்டங்களின் படி, அவர் இப்பணிக்கு தேர்வுசெய்யப்படவில்லை என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.


பல்கலைக் கழக மானியக்குழுவின், சட்ட திட்டங்கள் 2010ன் படி, 10ஆண்டுகள், பேராசிரி யராக முறைப்படி பணியாற்றியதுடன், உரிய கல்வித்தகுதிகள் கொண்டவரை, பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும்.மதுரை பல்கலைக் கழக, துணைவேந்தராக பணியாற்றிய கல்யாணி,இப்பதவிக்கு விண்ணப்பித்த போது, பேராசிரியர் பதவி வகித்ததாக கூறியதகவலை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்தஇவ்வழக்கை, நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி விசாரித்து,இம்முடிவை அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில், துணைவேந்தர் ஒருவரைபதவியில் இருந்து அகற்ற, வழக்கு காரணமாக அமைந்தது, இதுவேமுதல்முறை. அதே சமயம், தேர்வுக் குழுவை இப்புகாரில் இருந்துவிடுவித்தனர். கல்யாணி மதிவாணன் உரிய கல்வித் தகுதி கொண்டவர் என்றவிளக்கத்தை ஏற்றால், பல்கலை மானியக்குழு விதிகள் செல்லாததாகி விடும்என, நீதிபதி வி.ராமசுப்ரமணியன் குறிப்பிட்டு, அவரது நியமனத்தைஏற்கவில்லை. அதைவிட இந்திய பல்கலைக் கழகங்களில், தலைசிறந்தவிஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூட, துணைவேந்தர் ஆக முடியாது என்றும், அவர்குறிப்பிட்டது, இப்பிரச்னையின் பரிமாணத்தை உணர்த்துகிறது.


சென்னை பல்கலையின், சர் ஏ.லட்சுமணசாமி முதலியார், 27 ஆண்டுகள்துணைவேந்தராக இருந்து, அப்பதவிக்கு புகழ் சேர்த்தார். மேலும், மால்கம்ஆதிசேஷய்யா உட்பட, பலர் இப்பெருமை மிகு பதவியை சிறப்பித்த வரலாறுஉண்டு. கடந்த பல ஆண்டுகளாகவே, இம்மாதிரி மிகப்பெரும் பொறுப்புகளைஏற்பவர்கள், பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டங்களில், கருத்துமுரண்பாடுகளை சந்தித்தது உண்டு. தற்போது, பேராசிரியர்கள் மற்றும்ஆசிரியர்கள் நியமனங்கள், முழுத்தகுதி அல்லது திறமை என்பதை விட, விலைகொடுத்து வாங்கலாம் என்ற நிலை தான் உள்ளது. சற்று கவுரவமாக,கல்விப்பணியில் கழித்த பல துணைவேந்தர்கள், 'கல்வியில் அரசியல்நுழைந்ததால் தான் இந்த விபரீதங்கள்' என்று முணுமுணுத்தாலும், அதைக்கேட்டு சீராக்க, காலம் இன்னும் கனியவில்லை. கல்வி சிறக்க, பல ஆயிரம்கோடிகள் அரசால் செலவழிக்கப்படும் போது, பல்கலைக் கழக நெறி முறைகள்தவறும்போது, தீர்ப்புகள் இவைகளை சுட்டிக்காட்ட நேரிடுகிறது. அதனால்,பொதுமக்களுக்கு பல விஷயங்கள் தெளிவாகின்றன. மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி பற்றிஅலசப்பட்டது. பிரதமர் தன் தனிப்பட்ட அதிகாரப் பொறுப்பில், மக்கள் அளித்ததீர்ப்பின் அடிப்படையில், அமைச்சர்களை நியமிப்பதால், ஸ்மிருதி இரானிபற்றிய பரபரப்பு அடங்கியது. அதே மாதிரி அணுகுமுறைகள், கல்விநிலையங்களில் தலைமை வகிப்போருக்கு உள்ள அளவுகோல் அல்ல. தமிழ்இலக்கியத்தில், நிறைய கல்வி கேள்வி களில் சிறந்தவர்களை, 'சான்றோர்' எனஅழைப்பர். கல்வியில் தலைசிறந்த, இளைய தலைமுறையை வழிநடத்தும்திறன்மிக்க ஆசான்கள் தான், துணைவேந்தர்கள் ஆகவேண்டும். அதற்கானதேர்வு நடைமுறைகளும் வந்தால், நம் நாட்டின் பல்கலைக் கழகங்கள், உலகத்தரத்திற்கு உயரும். அதற்கான வழிகாட்டுதலாக, இத்தீர்ப்பு அமைந்திருக்கிறதுஎன்றே கருதலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி