ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14-


பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே கோல் அடித்து அர்ஜென்டினாவை வீழ்த்தியஜெர்மனி வெற்றி பெற்றது.
பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதியில் இருந்து 20–வது உலக கோப்பைகால்பந்து போட்டி நடந்து வருகிறது.
ஜுன் 12 முதல் 26 வரை ’லீக்’ மற்றும் ‘நாகவுட்’ சுற்றுகள் முடிந்து, 28-ம்தேதியில் இருந்து ஜூலை 1 வரை இரண்டாவது சுற்றும், ஜூலை 4 மற்றும் 5-ம்தேதிகளில் காலிறுதி ஆட்டமும், ஜூலை 8, 9 மற்றும் 12,13 தேதிகளில்அரையிறுதி ஆட்டமும் முடிவடைந்த நிலையில் பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிரோவில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
இன்றைய இறுதி ஆட்டத்தில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம்தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள லியோனல்மெர்சி தலைமையில் உள்ள அர்ஜென்டினா அணியும் மோதின.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டிவிறுவிறுப்பாகவே தொடங்கியது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளின் கோல் வாய்ப்பும்மயிரிழியில் பறி போக, நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்கள்கடந்தும் ஸ்கோர் 0-0 என்ற நிலையில் தான் இருந்தது. கூடுதலாககொடுக்கப்பட்ட நேரத்தில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியா கோட்சேஅடித்த அசத்தலான கோலால் ஜெர்மனி தனது கணக்கை வரவு வைத்தது.
அடுத்த 7 நிமிடங்கள் வரை ஜெர்மனியின் கணக்கை சமன் செய்ய அர்ஜென்டினாவீரர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்காததால் ஒற்றை கோலில்அர்ஜென்டினாவை வீழ்த்திய ஜெர்மனி, வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த வெற்றியின்மூலம் 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.