அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?

அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?

2014 ஜூன் மாத விலைவாசிக் குறியீட்டு எண் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு சதவீதம் வெளியிடப்படும். இதன் பிறகு தான் நிதித் துறை அமைச்சகம் அகவிலைப்படி உயர்வு பற்றி பரிந்துரை செய்யும். 7% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு மட்டுமே. இதைவிட குறைய வாய்ப்பு இல்லை. 8% ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

கடந்த (மே) மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அகவிலைப்படி 7% விட அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி நிலை ஜூலை 31 ஆம் தேதி தெரிய வரும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி