பள்ளிக்கல்வித்துறையில் கீழ் உள்ள அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்ய உள்ள ஆசிரியர்களின் இறுதி பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை நடைபெற உள்ளபணி நிரவல் கலந்தாய்வில் இந்த நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு பணிநிரவல் ஆணை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.