வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு ‘‘செயல்படாத கணக்கில் இருப்பு இல்லாவிட்டால் அபராதம் கூடாது’’co


மும்பை : வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதை நடைமுறையில் பராமரித்து வராத வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சில வங்கிகள் பின்பற்றி வருகின்றன.


இந்த நடைமுறையை ரத்து செய்து வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


அந்த உத்தரவில், ‘‘இனிமேல், பராமரிப்பில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என்று கூறி அபராதம் விதிப்பதற்கு அனுமதி கிடையாது’’ என கூறப்பட்டுள்ளது.


மேலும், ‘‘அப்படி அபராதம் விதிப்பதற்கு பதிலாக அத்தகைய கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை குறைத்துக்கொள்ளலாம், குறைந்த பட்ச இருப்புத்தொகையை பராமரித்த பின்னர் அந்த சேவைகளை மீண்டும் வழங்கலாம்’’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், பராமரிக்கப்படாத வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லை என்றாலும், அபராதம் விதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி