CBSE +2 Result மே 28-க்குள்

மே 28-க்குள் சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


          சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.

           தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர்.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக சுதர்சன ராவிடம் கேட்டபோது அவர் கூறியது:

சி.பி.எஸ்.இ. இயக்குநரிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 26 அல்லது 27 தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு வாரங்களில் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி