மே 28-க்குள் சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.
சி.பி.எஸ்.இ. இயக்குநரிடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் வரும் 28-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 26 அல்லது 27 தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு வாரங்களில் மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.