அண்ணாமலை பல்கலையில் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற் படிப்பு சேர்க்கை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு இன்றி தொழிற்படிப்புகளில் சேரலாம் என்று பல்கலைக்கழக நிர்வாக தலைவர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். தொழிற் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.இ ஆகியவற்றில் சேரலாம்.
கடந்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு முறை மற்றும் கல்விக்கட்டண முறைகளை வகுத்து வருகிறது.
அந்த வகையில், எம்பிபிஎஸ் 150 இடங்களும், பிடிஎஸ் 100 இடங்களும், இன்ஜினியரிங் 3000 இடங்களும், விவசாயம் மற்றும் தோட்டக்கலை படிப்புக்கு 1,075 இடங்களும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி