மாணவர் சேர்க்கை விளம்பரங்கள்: அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கத்தாலும், அவை மேற்கொள்ளும் பல்வகை விளம்பர உத்திகளாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய உத்திகளைக் கையாள கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு 14வகையான விலையில்லாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

எனவே, பள்ளிகள் அதன் அருகேயுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்தல் வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி