நரேந்திர மோடி தலைமையில் 46 மந்திரிகளை கொண்ட புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமாக நடந்தது.
முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து 45 மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இதனால் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் இலாகா பற்றிய எதிர்பார்ப்பு நாடெங்கும் நிலவியது. நேற்றிரவு தொலைக்காட்சிகளில் அதிகாரப் பூர்வமற்ற உத்தேச இலாகா ஒதுக்கீடு தகவல்கள் வெளியானது.
ஆனால் இன்று காலை நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்துக்கு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கிய பிறகுதான் புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதிய மந்திரிகளுக்கான இலாகா விவரம் வருமாறு:–
பிரதமர் நரேந்திர மோடி– அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலத்துறை, பென்ஷன், பணியாளர் குறை தீர்ப்பு மற்றும் கொள்கை முடிவுகள்.
1. ராஜ்நாத்சிங் – உள் துறை.
2. சுஷ்மா சுவராஜ் – வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.
3. அருண்ஜேட்லி – நிதி மற்றும் ராணுவத்துறை, நிறுவன விவகாரம்.
4. வெங்கையா நாயுடு – நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, பாராளுமன்ற விவகாரம்.
5. நிதின்கட்காரி– சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை.
6. சதானந்த கவுடா – ரெயில்வே
7. உமாபாரதி – நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை சுத்திகரிப்பு
8. நஜ்மா ஹெப்துல்லா – சிறுபான்மையினர் விவகாரம்.
9. கோபிநாத் முண்டே – ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல்.
10. ராம்விலாஸ் பஸ்வான் – உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலன்.
11. கல்ராஜ் மிஸ்ரா– நடுத்தர, சிறு குறு தொழில்.
12.மேனகாகாந்தி – பெண்கள், குழந்தைகள் நலம்.
13. அனந்தகுமார் – உரம் மற்றும் ரசாயணம்
14. ரவிசங்கர் பிரசாத் – தொலைத் தொடர்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதி.
15. அசோக் கஜபதி ராஜு – விமான போக்குவரத்து
16. ஆனந்த் கீதே – தொழில் துறை மற்றும் பொது நிறுவனம்.
17. ஹர்சிம்ரத் கவுர் – உணவு பதப்படுத்துதல்.
18. நரேந்திர சிங் தோமர் – சுரங்கம் மற்றும் இரும்புத் துறை தொழிலாளர் – வேலை வாய்ப்பு.
19. ஜுவல் ஓரம் – மலை வாழ் மக்கள் நலத்துறை
20. ராதாமோகன்சிங் – விவசாயம்
21. தவாரி சந்த் கெலாட் – சமூக நீதி மற்றும் அதிகாரம்.
22. ஸ்மிருதி இரானி – மனிதவளம் மேம்பாடு
23. ஹர்ஷ் வர்தன் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்.
ராஜாங்க மந்திரிகள் (தனி பொறுப்பு)
1. தளபதி வி.கே.சிங் – வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் நலம்.
2. ராவ் இந்தர்ஜித்சிங் – திட்டம் (தனி பொறுப்பு), புள்ளியல், திட்ட அமலாக்கம், ராணுவம்.
3. சந்தோஷ்குமார் கங்வார் – ஜவுளி, நீர் வளம், நதி மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரம்
4. ஸ்ரீபாத் எஸ்சோ நாயக் – சுற்றுலா மற்றும் கலாச்சாரம்.
5. தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.
6. சர்பனந்த சோனாவால் – பட்டு ஜவுளி மேம்பாடு, தொழில் முனைவோர் நலம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு.
7. பிரகாஷ் ஜவடேகர் – தகவல் ஒளிபரப்பு சுற்றுச் சூழல், வனத்துறை, பருவ நிலை மாற்றம் (தனி பொறுப்பு), பாராளுமன்ற விவகாரம்.
8. பியூஸ் கோயல் – மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி.
9. ஜிதேந்திர சிங் – அறிவியல் தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பென்சன் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு, விண் வெளி மற்றும் அணுசக்தி.
10. நிர்மலா சீதாராமன்– வர்த்தகம் மற்றும் தொழில் (தனி பொறுப்பு) நிதி, நிறுவன விவகாரம்.
1. சித்தேஸ்வரா – விமான போக்குவரத்து
2. மனோஜ் சின்கா – ரெயில்வே
3. நிகல் சந்த் – ரசாயணம் மற்றும் உரம்
4. உபேந்திர குஷ்வாகா – ஊரக மேம்பாடு, பஞ்சாயத் ராஜ், குடிநீர்.
5. பொன்.ராதாகிருஷ்ணன் – கனரக தொழில் மற்றும் பொதுத் துறை, அரசுத் துறை தொழில்கள்.
6. கிரண் ரிஜ்ஜு – உள் துறை
7. கிரிஷன் பால்குஜ்ஜார் – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல்.
8. சஞ்சீவ்குமார் பல்யாண்– வேளாண், உணவு பதப்படுத்துதல் தொழில்.
9. மன்சுக்பாய் – மலைவாழ் மக்கள் நலம்.
10. ராவ் சாகிப் தாதாராவ் தன்வே – நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகம்.
11. விஷ்ணு தேவ் சாய் – சுரங்கம், இரும்பு, தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு.
12. சுதர்சன் பகத் – சமூக நீதி மற்றும் அதிகாரம்.
அமைச்சரவையில் முதன் முதலாக கங்கை நதியை சீரமைத்து, தூய்மைப்படுத்துவதற்கு என்றே தனித்துறையை முதன் முதலாக நரேந்திர மோடி ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. புனித கங்கையில் சேரும் மாசுக்களை அகற்றி அதில் உலகம் முழுவதிலும் இருந்து வரும் பக்தர்களை தீர்த்த மாட வைக்கும் நோக்கத்தில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த துறையை முழு ஈடுபாட்டுடன் செய்வதற்காக உமாபாரதியை அதன் பொறுப்பாளராக மோடி நியமித்துள்ளார். உமா பாரதிக்கு ராஜாங்க மந்திரி சந்தோஷ்குமார் கங்வார் உதவியாக இருப்பார்.