மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது



          மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
          தொலைபேசியுடன் கூடிய சேவையில், அன்லிமிடெட் வசதியுடன், அகன்ற அலைவரிசை சேவைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முறையே ரூபாய் 1,455 (20 ஜிபி வரை நொடிக்கு 2 எம்பி வேகமும், அதன்பிறகு 1 எம்பி வேகம்), ரூபாய் 2,799 (30 ஜிபி வரை 4 எம்பி வேகம் அதன்பிறகு 2 எம்பி வேகம்) மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
         இதில் மாத வாடகையை ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுக்கு மொத்தமாக செலுத்துபவர்களுக்கு சிறப்புச்சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது. . மேலும் 250 இலவச அழைப்புகளும் உண்டு.தொலைபேசி இணைப்பு ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் மாதம்  ரூபாய் 1,275 வாடகையில் இணைப்பு பெற்று பிராண்ட் பேண்ட்சேவையை பெறலாம். பிஎஸ்என்எல் பொது தொலைபேசிகளில் ஒரு அழைப்பு நேரம் 60 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி