29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது. கடந்த ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் வந்ததை அடுத்து சான்று சரிபார்ப்பு நடத்துவது தள்ளிப் போனது. இன்று 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு வழக்கம் போல காலை 9 மணி முதல் நடக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி