புதுடெல்லி: மக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோகவெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டுள்ள 63 வயது நரேந்திர மோடி, இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரம்வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். நடந்து முடிந்த மக்களவைதேர்தலில் பா.ஜ கட்சி 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன்சேர்த்து பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்336 எம்.பி.க்கள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றபா.ஜ நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் நரேந்திர மோடி தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இன்று மாலை பதவி ஏற்க வரும்படிஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். இந்த விழாவுக்காகஜனாதிபதி மாளிகை வளாகத் தில் உள்ள முற்றத்தில் பிரமாண்டஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சார்க் நாடுகளின் தலைவர்கள்உட்பட 3 ஆயிரம் வி.ஐ.பி.க்களுக்கு பா.ஜ சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்,இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், பூட்டான்பிரதமர் டோப்கே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவுஅதிபர் அப்துல் கயூம், மொரீசியஸ் அதிபர் நவீன் ராம்கூலம்ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஜப்பான் பயணம்மேற்கொண்டுள்ளதால், அவரது சார்பில் சபாநாயகர் ஷிரின் சவுத்திரிகலந்து கொள்கிறார். மோடியின் தாயார் ஹிராபென் இந்த விழாவில்கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்ராகுல் காந்தி, மாநில முதல்வர்கள் உட்பட பலரும் இந்த விழாவில்பங்கேற்கின்றனர். 10 ஆயிரம் வீரர்கள்: பிரதமர் பதவி ஏற்புவிழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவி.ஐ.பி.க்கள் கலந்து கொள்வதால், ஜனாதிபதி மாளிகையை சுற்றிநான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், துணை ராணுவம், எஸ்.பி.ஜி, தேசிய பாதுகாப்புபடை (என்.எஸ்.ஜி), டெல்லி போலீசார் என 10 ஆயிரம் பேர்பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மாளிகைக்கு மேல்விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும்4 அல்லது 5 பேர் கூடி பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. காந்திநினைவிடத்தில் மரியாதை: பிரதமராக பதவி ஏற்பதை முன்னிட்டு,டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம் ராஜ்காட்டில்நரேந்திர மோடி இன்று காலை மலர் தூவி மரியாதைசெலுத்துகிறார்.
விருந்தில் செட்டிநாடு சிக்கன்
பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும் சார்க் தலைவர்கள் மற்றும்விருந்தினர்களுக்கு ராஷ்டிரபதி பவனில், தமிழ்நாட்டின் செட்டிநாடுசிக்கன் முதல் பஞ்சாபின் தால் மக்கானி வரையில் பல்வேறு மாநிலஉணவு வகைகள் பரிமாறப்படும். 14 பேர் பாகிஸ்தான் குழு:பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் தேசிய பாதுகாப்பு மற்றும்வெளியுறவு விவகாரத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஸ்,வெளியுறவுச் செயலாளர் அய்சாஸ் சவுத்திரி உட்பட 14 பேர்கொண்ட அதிகாரிகள் குழுவும் வருகிறது.
ஜந்தர் மந்தரில் மட்டும் போராட்டத்துக்கு அனுமதி
இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்ப்பு தெரிவித்து சிலஅரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் டெல்லியில் கருப்புகொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தன.இதனால், டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மட்டும் போராட்டம்நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் உயர்அதிகாரி தெரிவித்துள்ளார்.