இதுவும் ஒரு வகையில் வன்முறை தான் .....!

நம் சமூகத்தில் பல வன்முறைகள் நடந்துக் கொண்டிருந்தாலும் இது குழந்தைகள் மீது பெற்றோர் நடத்தும் வன்முறையாகவே எனக்கு தோன்றுகிறது. ...! 

எல்லா பெற்றோர்களுக்கும் தன பிள்ளைகள் படிப்பில் முதலில் வர வேண்டும்.. என்று தான் நினைக்கிறார்கள்.., இன்னும் சில பேர் ஒரு படி மேலே போய் , நடனம், பாட்டு,நீச்சல், அறிவுத்திறன் வளர்த்தல் என பல வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். இது எல்லாம் கற்றுக் கொண்டால் நல்லது தானே என்று கேட்க தோன்றும். அதற்கு ஒரு குறிப்பிட வயது வர வேண்டாமா...? ஐந்து வயது குழந்தை எவ்வளவு தான் கற்றுக் கொள்ளும். .! மாலை வந்ததும் பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடத்தைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும்.., பிறகு பிற வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்...! சோர்ந்து வரும் பிள்ளையை உடனே சாப்பிட ஏதாவதுக் கொடுத்து மறுபடியும் அனுப்புகிறார்கள்...!

வார இறுதி நாட்களிலும் ஏதாவது ஒரு வகுப்பு என அவர்களை விடுவதில்லை...? இதில் என்ன கொடுமை என்றால் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்குப் போனால் அதற்கு ஒரு சான்றிதழ்...! அதற்காக இந்த பெற்றோர்கள் குழந்தைகளை விடுப்பே எடுக்க விடுவதில்லை...! உடல் நலமில்லாமல் இருந்தாலும் மருந துக் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்...!

இந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. நமக்கு சிறு வயதில் கிடைத்த இனிமையான வாய்ப்புகளை, அனுபவங்களை இழந்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, நண்பர்களின் இல்லங்களுக்கு செல்லும் போது அங்குள்ளவர்களின் உரையாடல், அவர்களின் அன்பு, தெருக்களில் விளையாட்டும் போது நாம் கண்டு, கற்றுக் கொண்ட காட்சிகள் என எவ்வளவோ இருக்கின்றன...! 


இந்த குழந்தைகளுக்கு நன்கு பேசிப் பழக நண்பர்களும் இல்லை.., பெற்றோர்களுடன் பேசுவதற்கு நேரமும் இல்லை....! பணம் கட்டிய பந்தயக் குதிரைகள் போல ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.... எதைப் பிடிக்க ஓடுகிறோம் என்பதே தெரியாமல்..? தற்போது எல்லா வீடுகளிலும் ஒரே குழந்தை என்பதால் வீட்டிலும் அவர்களால் விளையாட முடிவதில்லை...! தொலைக் காட்சி, கணினி விளையாட்டு என்பது மட்டும் அவர்கள் இளைப்பாறக் கிடைத்திருக்கும் ஒரே ஒரு வடிகால்...!

இதனால் விளைவது என்னவென்றால் சிறு வயதிலேயே மன அழுத்தம்..! இவ்வழுத்தம் அதிகமாகி, அதிகமாகி, சில குழந்தைகள் படிப்பில் நாட்டமில்லாமல், உடல் நிலையிலும் பிரச்சனை என பல வழிகளில் பாதிக்கப் படுகின்றனர்....! 

இதை மாற்ற வேண்டுமானால், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்...: மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை... என்பதை முதலில் உணருங்கள்...! எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டுமென்ற எண்ணத்தை விட்டொழியுங்கள் .... ! அவர்களை அவர்களாக வாழ விடுங்கள்...! பிறகுப் பாருங்கள்...அவர்கள் திறமையை... நீங்களே அசந்துப் போவீர்கள்....!


Thanks To : Mrs.Susila Durai

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி