10 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை

தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.


இந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு, ஜன., 1 முதல், 10 சதவீத அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு, இன்னும், 10 சதவீத அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக முதல்வர், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி