மேலை நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை வெற்றி விகிதம் குறைவாக உள்ளது என புற்றுநோய் சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் பிரசாத் கூறினார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் அலெக்ஸ் பிரசாத் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: முறையான நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் புற்றுநோயை குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம் என நம் மக்கள் கருதுகின்றனர்.
தவறான இக் கருத்து களையப்பட வேண்டும். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றார் அவர்.