ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும்: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.


இந்த விதி கடந்தாண்டே அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் தாக்கங்கள், SA2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் இந்த நேரத்தில்தான் மாணவர்களிடம் வேலைசெய்ய தொடங்கியுள்ளன. இந்த புதிய விதி அமலுக்கு வரும் முன்னதாக, ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியல்(marksheet), ஒவ்வொரு பாடத்தின் இரண்டு SA தேர்வுகள் மற்றும் 4 பார்மேடிவ் மதிப்பீடுகளின் (Formative Assessment) ஆகியவற்றின் கூட்டு மதிப்பெண்கள் ஆகியவை மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.


இது மாறாமல் நீடித்திருக்கும் சூழலில், மாணவர்கள் தற்போதை ய நிலையில், ஒவ்வொரு SA -விலும், 60க்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதன்மூலம், மாணவர்களுக்கு விளையாட்டுத்தனமான மனப்பான்மை நீங்கி, எதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு, முறையாக செயல்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி