தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல்

2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்விக்கு சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். 

தமிழகத்தில் மொத்தம் 33,800க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றை இணைக்கும் பணி தற்போது நடைபெற்ற வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினிமயமாக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி