இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்



* அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளமாமலும் போகலாம்.
* அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கின்ற ஒப்பந்தம், உடன்படிக்கை, பட்டயம் அல்லது அது போன்ற சாசனங்கள் மற்றியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் குடியரசுத் தலைவர் கேட்டறியலாம்.
* இது குறித்த வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை அளிப்பது உச்சநீதிமன்றத்தின் தவரிக்க இயலாத கடமையாகும்.
* உச்சநீதிமன்றம் தன்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புரையை மறு ஆய்வு செய்வதற்குரிய அதிகாரத்தை Art.137 வழங்குகிறது.
* அதாவது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புரைகள் ஆணைகள் போன்றவை அதன்கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அவை உச்சநீதிமன்றத்தினைக் கட்டுப்படுத்தாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
** நீதிமன்ற அவமதிப்பு - Contempt pf Court
* உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாக (court of record) திகழ்கிறது.
* ஆவண நீதிமன்றம் என்றால், தன்னை அவமதிப்பவர்களுக்கு அதுவே தண்டனை அளிக்கலாம்
* நீதிமன்றத்தைப் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும், நலமலெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், பொதுநலன் கருதி, நீதித்துறையின் செயல்பாடு குறித்துச்
சொல்லப்படும் நியாயமான விமர்சனம் ஆகியவை தவிர பிறவகைகளில் அதுகுறித்த விமர்சனங்களுக்காக, உச்சநீதிமன்றம் தண்டனைகளை விதிக்கலாம்.
* நீதிமன்ற அவமதிப்பு என்பது சிவில் மற்றும் கிரிமினல் ஆகிய வழக்குகளுக்கும் பொருந்தும், சிவில் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காமை ஆகும்.
* கிரிமினல் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் குறித்து தவறான எண்ணங்களை மக்களிடையே பரப்புதல், இதனால் நீதிமன்றத்தின் செயல்பாடுளுக்கு இடையூறு தோற்றுவித்தல், நீதிமுறை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகியவையாகும்.
* உச்சநீதிமன்றம் தமக்குத் தேவைப்படும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை குடியரசுத் தைவரின் அனுமதியின்பேரில், தாமே உருவாக்கிக் கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது.
* உச்சநீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கும், ஏனைய அலுவலர்களும் தலைமை நீதிபதியால் அல்லது அவர் சொற்படி பிற நீதிபதியால், அல்லது அதிகாரியால் நியமிக்கப்படுகிறார்கள்.
* மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஏதேனும் வழக்குகள் தோன்றினால் அதனை தீர்க்கும் அதிகாரமும், உச்சநீதிமன்றம் வசமே உள்ளது.
* மத்திய அரசுத் தேர்வுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், அதன் தலைவர் ஆகியோரை நீக்க வேண்டுமென்று, குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யும் அதிகாரமும் உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
** அரசியலமைப்பின் பாதுகாவலன் - Guardian of the Constitution
* உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுவது, அது அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவதே ஆகும்.
* மேலும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் பணியிலும், அது இந்தியக் குடிமக்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.
* மேலும் உச்சநீதிமன்றம் சரியானதென்று கருதும் விசயங்களையும், வழக்குகளையும் தாமே முன்வந்து பொதுநல வழக்கு(Public Interest Litigation) என்ற அடிப்படையில்,
எடுத்துக்கொண்டு உரிய தீர்வுகளை மக்களுக்கு வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. இதனால் சமுதாய சமநீதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றங்கள் - High Courts
* Art.214ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.
* எனினும் Art.231-ன் படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தைத் தோற்றுவிக்கவும் பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
* மாநில நீதித்துறையின் தலைமை அமைப்பாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கென்று, 21 உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
* கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. 2004-ல் தமிழகத்தின் மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை தோற்றுவிக்கப்பட்டது.
* 11வது நீதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் 01.04.2001 முதல் தொடங்கப்பட்டன.
* மாநில சட்ட உதவி ஆணையத்தின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் லோக் அதாலத் தொடங்கப்பட்டுள்ளது.
** உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - Appointment of Judges
* ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதிகளையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிற எண்ணிக்கையில் பிற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும்.
* உச்சநீதிமன்றத்தைப் போலன்றி, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை, மாறாக அந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
* உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கு கீழ்காணும் பிற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை:
* நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கென்று, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல், குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.
* உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாத போதோ அல்லது பணியாற்ற இயலாத சூழ்நிலையிலோ (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர) அக்குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.
* அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நீதிபதி பணியேற்கும் வரை பதவில் இருப்பார்.
* எனினும் கூடுதல் நீதிபதியாக இருப்பினும், தற்காலிக நீதிபதியாக இருப்பினும் 62 வயது வரை மட்டுமே பணியாற்ற இயலும்.
* உயர்நீதிமன்ற பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, இந்திய தலைமை நீதிபதி, அந்த மாநில ஆளுநர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆலோசித்த பின்னரே குடியரசுத் தலைவர் செயல்படுவார்.
* உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தமது 62 வயது வரை பதவி வகிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது குறித்து எழும் பிரச்சனைகளில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.
1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. இந்திய நீதித் துறையில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
3. ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ தொடர்ந்து பத்தாண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருத்தல் வேண்டும்.
** உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை:
* உயர்நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது.
* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
* உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு அதே உயரிநீதிமன்றம் தவிர பிற உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும்.
* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.
* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் அந்தந்த மாநில தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of State)  செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், அம்மாநில சட்டப்பேரவையின் வாக்கெடுப்பு தேவையில்லை.
* மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட் இயலாது.
* உயர்நீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் , குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், ஒரு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் Art.222 அதிகாரம் வழங்குகிறது.
* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்.
* அரசிலமைப்பின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்
* அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 65
* உச்சநீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம் - 2 ஆண்டுகள்
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை - குற்ற விசாரணை முறை
* குற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர் - ஆர்.ராமசாமி(1991-93ல்)
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - இந்திய தொகுப்பு நிதியம் (இந்திய ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து)
* உச்சநீதிமன்றத்தின் இணையதளம் - supremecourtofindia.nic.in
* நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு - உச்சநீதிமன்றம்
* அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் எதைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது - நீதிப்பேராணைகள்
* தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை - 30 + 1
* உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை - 1950ல் - 8, 1956ல் - 11, 1960ல் -14, 1978ல் - 18, 1986ல் - 26, 2008ல் - 31
* உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், பிற 7 நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர்.
* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மேலும் நியமிக்க அரசியயமைப்பு வழி செய்துள்ளது.
* இந்த அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றம், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்றும் பிற 30 நீதிபதிகளும் இடம்பெற சட்டமியற்றியுள்ளது. (Art.124)
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
* குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.
* இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை - 21
* மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது - உயர்நீதிமன்றம்
* சென்னை உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது - பாண்டிச்சேரி
* அடிப்படை உரிமைகளுக்காக நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது - உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்
* ஆளுநர் பதவி காலியாக உள்போது தற்காலிக ஆளுநராகச் செயல்படுபவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
* தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது - ஹேபியஸ் கார்பஸ்
* செயலுறுத்தும் நீதிப்பேராணை என்பது - மாண்டமஸ்
* கோ வாரண்டோ என்பது - தகுதி முறை வினவும் பேராணை
* அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைாகளுக்காக ஐந்து நீதிப்போராணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு - உயர்நீதிமன்றம்
* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - மாநில தொகுப்பு நிதியம்
* உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 62
* மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1986
* இந்திய உயர்நீதிமன்றங்களில் மிகவும் பழமையானது கொல்கத்தா, மும்பை, சென்னை உயர்நீதிமன்றம். இது நிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 26,1862.
* சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஜூன் 26,1862
* சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லை - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளடக்கியது.
* தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு 1862 ஆகஸ்ட் 15 முதல் மெட்ராஸ் ஹை கோர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிலை - மனுநீதிச் சோழனின் சிலை.
* சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளம் http://www.hcmadras.tn.nic.in
* சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி - எம்.ஒய். இக்பால்
* தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர் - பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன். இவரின் கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்னரே தற்போதைய உயர்நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டது.
* சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்ட பழைய இடத்தின் பெயர் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்)
* சென்னை உயர்நீதிமன்றம் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின் பேரில் கட்டப்பட்டது.
* உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன் பெய்லி நீதிமன்றம்.
* இந்தியாவில் முதல் பெரிய உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்.
* உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர் - மாவட்ட முன்சீப்

Courtesy : http://thinkgovtjob.blogspot.in/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி