அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி

அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களை சென்றடைய வேண்டும். இதற்காக, அரசு அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால், மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதையடுத்து உடல்நலம், மனநலம் மேம்படுத்துவதற்காக, அரசு ஊழியர்களுக்கு யோகா, தியானம் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பணிகளுக்கு இடையூறு இல்லாமல், எந்த மதத்தையும் சாராத, சடங்குகள் அற்ற மனவள கலை யோகா பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி, தினமும் ஒரு மணி நேரம் வீதம் 18 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி