இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

லோக்சபா தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில், நாளை (10ம் தேதி) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப் பணி நடந்தது. ஒரு மாதத்தில், 30 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை பரிசீலித்து, ஆய்வு செய்யும் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.

'இப்பணியை முடித்து, 6ம் தேதி, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், பணி தாமதமானதால், அன்று வெளியாகவில்லை. தற்போது பணி நிறைவு பெற்றுள்ளதால், நாளை, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி