புதுடில்லி: ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான, "கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், எட்டு மாணவர்கள், 100 சதவீத மதிப்பெண் பெற்றனர். பத்து பேர், 99.99 சதவீத மதிப்பெண் பெற்றனர். அவர்களில், பெரும்பாலானோர், ஐ.ஐ.டி., மாணவர்கள். வெற்றி பெற்றவர்கள், நாட்டின் சில நகரங்களில் உள்ள, பிரசித்தி பெற்ற, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க அனுமதி பெற்றுள்ளனர். இந்த நிறுவனங்களில், வெற்றிகரமாக படித்து முடிக்கும் மாணவர்களை, மாதம், பல லட்ச ரூபாய் சம்பளத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நம் நாட்டு நிறுவனங்கள், பணியில் அமர்த்திக் கொள்ள, போட்டபோட்டி போடுகின்றன.