புதுடில்லி: 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியான ரூபாய் நோட்டுக்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ஏப்ரல் 1ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும், ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களின் பின்பக்கத்தில் ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.