திருவள்ளுவர் பல்கலைக்கு 12பி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. முடிவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அப்பல்கலைக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

UGC வட்டாரங்கள் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்று ஆய்வுசெய்த நிபுணர் குழுவின் அறிக்கையை UGC ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கையில், 12B அந்தஸ்தைப் பெற திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தகுதியானது என்று கூறப்பட்டிருந்தது.

இதன்மூலம் அப்பல்லைக்கழகம், UGC -ன் நிதியுதவியைப் பெற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திருவள்ளுவர் பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் பல்கலைக்கு இது ஒரு பெரிய வெற்றி. நாங்கள் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம். மேலும், NAAC அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நாங்கள் கடின முயற்சி எடுப்போம்.

மேலும், UGC -உடன் இணைக்கப்பட்ட தொலைநிலைக் கல்வி அமைப்பின் மூலமாக, அஞ்சல் வழிக் கல்வியை நடத்துவதற்கு நிதி உதவி கோரப்படும். ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெறுவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி