நேற்று, ஒரே நாளில் மட்டும்,1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு

நேற்று, ஒரே நாளில் மட்டும், 1,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு, உடன் பணியாற்றிய ஊழியர்கள், பிரியா விடை கொடுத்து வழியனுப்பினர்.
தமிழகத்தில், கல்வி, எரிசக்தி, வருவாய், மருத்துவம், உணவு உள்ளிட்ட, 37 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அதிகாரிகள், ஊழியர்கள் என, 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதில், 1 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், 2013 - 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர். அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று, ஓய்வு பெற்றனர். இதேபோல், தமிழகம் முழுவதும் உணவு, கால்நடை, தொழிலாளர் நலன், கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 1,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி