பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசு கருத்தரங்கங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் விமானங்களில் சிக்கன வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திட்டமல்லாத செலவினங்கள் 10 சதவீததம் குறைக்கப்பட வேண்டும். அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.