ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர் ஆதிர் சவுத்திரி, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மே.வங்க., மாநிலம் ஜல்பைகுரியில் பேசுகையில், "ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக, விரைவில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள்" என்றார்.