இலக்கிய நூல்களும், அவற்றில் அடங்கியுள்ள பகுதிகளும்

தமிழ்மொழியின் வளத்தை, பெருமையை காட்டும் இலக்கிய நூல்கள் பல. அவற்றின் மூலம் நாம் தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் அரும்பெருமைகளையும் படித்தறிய முடியும். அவ்வகையான நூல்கள், அவற்றில் அடங்கியுள்ள பகுதிகள், அதிகாரங்கள்.

தொல்காப்பியம்: தொன்மையான நூல் இது. இதில் மூன்று அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்கள் உள்ளன. 

திருக்குறள் (வள்ளுவம்): மூன்று பால்கள், 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள் அடங்கியுள்ளன.


சிலப்பதிகாரம்: இதில் 3 காண்டம், 30 காதைகள், 5001 வரிகள் உள்ளன. 

மணிமேகலை: 30 காதைகள், 4755 வரிகள் உள்ளன. 

சீவக சிந்தாமணி: இதில் 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள் உள்ளன. 

பெரியபுராணம்: இதில் இரண்டு காண்டங்கள், பதிமூன்று சருக்கங்கள், 4286 பாடல்கள் உள்ளன. 

கம்பராமாயணம்: இதில் ஆறு காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்கள்

நல்லாபிள்ளை பாரதம்: 18 பருவங்கள், 11000 பாடல்கள் உள்ளன. 

கந்த புராணம்: ஆறு காண்டங்கள் 135 படலம், 10345 பாடல்கள் உள்ளன. 

திருவிளையாடற் புராணம்: மூன்று காண்டங்கள், 3363 பாடல்கள் உள்ளன. 

தேம்பாவணி: இதில் மூன்று காண்டங்ள், 36 படலங்கள், 3615 பாடல்கள் உள்ளன. 

சீறாப்புராணம்: இதில் மூன்று காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்கள் அடங்கியுள்ளன. 

இரட்சணிய யாத்திரிகம்: 5 பருவங்கள், 47 படலங்கள், 3775 பாடல்கள் உள்ளன. 

இராவண காவியம்: இதில் ஐந்து காண்டங்களும், 57 படலங்களும், 3100 விருத்தங்களும் அடங்கியுள்ளன.

ஏசு காவியம்: இது ஐந்து பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளும் கொண்டது. 

குறிப்பு: மற்றெந்த மொழிகளைவிட தமிழ்மொழியில்தான் அளவுக்கதிகமான பாசுரங்கள் நிரம்ப உள்ளது.

நன்றி :  http://tnpscgks.blogspot.com

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி