டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.ஓ.இ.,), ஷோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சி.ஓ.இ., ஜெயகாந்தன், சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா, டி.என்.பி.எஸ்.சி., - சி.ஓ.இ.,வாக நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனம் குறித்து, ஓரிரு நாட்களில், தேர்வாணையம் அறிவிக்கை வெளியிடும். அதன்பிறகே, புதிய பதவியை ஷோபனா ஏற்பார் என துறை வட்டாரம் தெரிவித்தது.