தமிழ்நாடு முழுவதும் 12.07.2012 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு சுமார் 6 லட்சம் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுத உள்ளதால் அன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணையிட்டது. தற்போது அன்று பொது விடுமுறை அளித்ததற்கு பதிலாக 21.07.2012 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.